
ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்து சுருண்டது.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அபாரமாக ஆடிய இந்தியா, முதல் இன்னிங்ஸிலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 520 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
ஷேவாக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கம்பீர் 72 ரன்களும், டிராவிட் 66 ரன்களும் சேர்த்து இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 160 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலுவான நிலையை எட்டியது. கேப்டன் டோணி 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்நதார்.
கடைசி வரிசையில் இறங்கிய ஜாகிர்கான் அபாரமாக ஆடி 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 520 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இழந்தது.
இந்தியா 241 ரன்களுடன் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆடத் தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து வெறும் 75 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது நியூசிலாந்து.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து.
நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த பிளைன், இன்று காலை 67 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மெக்கல்லம் மட்டுமே சற்று போராடிப் பார்த்தார் 135 பந்துகளைச் சந்தித்த அவர் 84 ரன்கள் சேர்த்தார். அதேபோல ஜெ.டி. ரெய்டர் 21 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. இதனால் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து.
இதையடுத்து 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கம்பீரும், டிராவிடும் ஆட்டமிழக்காமல், 5.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி இந்தியாவுக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தனர்.
கம்பீர் 30 ரன்களும், டிராவிட் 8 ரன்களும் சேர்த்தனர்.
ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த 10 விக்கெட் வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்து சுருண்டது.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அபாரமாக ஆடிய இந்தியா, முதல் இன்னிங்ஸிலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 520 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
ஷேவாக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கம்பீர் 72 ரன்களும், டிராவிட் 66 ரன்களும் சேர்த்து இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 160 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலுவான நிலையை எட்டியது. கேப்டன் டோணி 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழ்நதார்.
கடைசி வரிசையில் இறங்கிய ஜாகிர்கான் அபாரமாக ஆடி 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 520 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இழந்தது.
இந்தியா 241 ரன்களுடன் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆடத் தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து வெறும் 75 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது நியூசிலாந்து.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து.
நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த பிளைன், இன்று காலை 67 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மெக்கல்லம் மட்டுமே சற்று போராடிப் பார்த்தார் 135 பந்துகளைச் சந்தித்த அவர் 84 ரன்கள் சேர்த்தார். அதேபோல ஜெ.டி. ரெய்டர் 21 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. இதனால் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து.
இதையடுத்து 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கம்பீரும், டிராவிடும் ஆட்டமிழக்காமல், 5.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி இந்தியாவுக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தனர்.
கம்பீர் 30 ரன்களும், டிராவிட் 8 ரன்களும் சேர்த்தனர்.
ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த 10 விக்கெட் வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

2 comments:
Very very useful think. Thanks for your news update... I will wait for ur daily news.
Athaan theriumla... neenga vera marubadium solringa.... ( Konjam Vadivelu Kuralil)
Post a Comment